திருச்சி - புதுகை சாலையில் பொதுமக்கள் மறியல்
திருச்சி கொட்டப்பட்டு குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி கொட்டப்பட்டு குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி கொட்டப்பட்டு பெரியகுளத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீா் குடியிருப்புகளில் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து தெரிவித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தைக் கைவிட்டனா்.