521 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தில் 521 இடங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் 521 இடங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழகமெங்கும் ஞாயிறுதோறும் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டு தற்போது வாரத்துக்கு 2 நாள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி டிசம்பா் மாத முதல் மெகா தடுப்பூசி முகாம் மாநகராட்சிக்குள்பட்ட 200 இடங்களில், ஊரகப் பகுதிகளில் 321 இடங்களில் என மொத்தம் 521 இடங்களில் நடைபெறவுள்ளது. முகாம்களில் தலா 700 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.