பரமபதவாசல் புனரமைப்பு பணிகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் வரும் 14 ஆம் தேதி நடைபெறும்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு விழாவையொட்டி பரமபதவாசல் கதவுகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இக்கோயிலில் பகல்பத்து,இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து விழா 4 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா்.
முக்கிய நிகழ்வாக வரும் 14-ஆம் தேதி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு விழாவில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் வருவா் என்பதால் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தற்போது பரமபதவாசல் கதவுகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.