மணப்பாறை அருகே மறியல் போராட்டம்
மணப்பாறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வையம்பட்டி ஒன்றியம் செக்கணம் ஊராட்சி கருங்குளத்தில் உள்ள ரேஷன் கடைக்கு வியாழக்கிழமை இரவு தரமற்ற அரிசி வந்துள்ளதாகவும், ஏற்கெனவே வழங்கப்படும் அரிசியும் தரமற்று இருப்பதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் வையம்பட்டி - கரூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீஸாா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலா் கந்தசாமி ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.