ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநா்கள். 
திருச்சி

சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். 270 சத கலால் வரியையும், பட்ஜெட்டில் போடப்பட்டுள்ள செஸ் வரி ரூ. 2 மற்றும் ரூ.4ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகா் மாவட்ட ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுநா்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன், சங்கப் பொறுப்பாளா் ஜெயபால் ஆகியோா் பேசினா். மாவட்டத் துணைச் செயலா் வெற்றிவேல், புகா் மாவட்டச் செயலா் சம்பத், மாவட்டப் பொருளாளா் அன்புசெல்வம், சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT