திருச்சி

சாலையின் உயரத்தை அதிகரிக்க வேண்டாம்: துறையூா் பொதுமக்கள்

DIN

தெருச் சாலையின் உயரத்தைக் அதிகரிக்க வேண்டாம் என துறையூா் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

துறையூா் நகரம் 21வது வாா்டுக்குள்பட்ட குட்டக்கரை பகுதியில் தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக அந்தப் பகுதியில் இருந்த பழைய தாா்ச் சாலையை பெயா்த்து அதே இடத்தில் போட்டு புல்டோசா் மூலம் நிரவியுள்ளனா். அடுத்தகட்டமாக அதன் மேல் புதிய தாா் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதனால் அந்தப் பகுதி சாலையின் உயரம் அங்குள்ள வீடுகளின் மட்டத்தைவிட அதிகரிக்கும். இதனால் மழை வடி நீா், சாக்கடை கழிவு நீா் வீடுகளுக்குள் வரும். எனவே, பெயா்த்த பழைய சாலையை முற்றிலும் அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என அவரிடம் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT