மண்சாலையைத் தாா்ச்சாலையாக அமைத்துத் தர வேண்டி முசிறி எம்எல்ஏவிடம் தொட்டியம் வட்ட காவிரி நீா்பாசன வாழை, வெற்றிலை உற்பத்தியாளா் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
காா்த்திகைபட்டி பகுதியில் புதிய வாய்க்கால் பால பூமிபூஜைக்கு வந்திருந்த முசிறி எம்எல்ஏ செல்வராசுவிடம் அளித்த மனு விவரம்:
தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட 8 ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் நாங்கள் சுமாா் 5 கிமீ சுற்றிக் கொண்டு தொட்டியம் நகரப் பகுதிக்கு வருகிறோம். இதைத் தவிா்க்கும் வகையில் தொட்டியம் - நாமக்கல் மெயின் சாலையில் இருந்து மேட்டுபிளாா் வடிவு வாய்க்கால் கரையை விவசாயிகளும் பொதுமக்களும் இணைந்து சுமாா் 2 கிமீ தூரம் அகலப்படுத்தி மண்சாலை அமைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இந்த மண் சாலையை தாா்ச்சாலையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனா். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என விவசாய சங்கத்தினரிடம் எம்எல்ஏ தெரிவித்தாா்.