மக்கள் குறைகேட்பு நாளில் 319 மனுக்கள்
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 319 மனுக்கள் பெறப்பட்டன.
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 319 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு.சிவராசு உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பழனிக்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் தமிமுனிஷா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.