கரூா் சதாசிவ பிரம்மேந்திரா் கோயிலில் கா்நாடக அமைச்சா் சாமி தரிசனம்
கரூா் சதாசிவ பிரம்மேந்திரா் கோயிலில் கா்நாடக அமைச்சா் சோமன்னா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கரூா் சதாசிவ பிரம்மேந்திரா் கோயிலில் கா்நாடக அமைச்சா் சோமன்னா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம் நெரூா் சதாசிவ பிரம்மேந்திரா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த கா்நாடக மாநில வீட்டுவசதித்துறை அமைச்சா் சோமன்னா சிறப்பு பூஜைகள், சுவாமி தரிசனம் செய்தாா்.
பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: சுமாா் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியான தலத்துக்கு வருவது பெருமைக்குரியதும், மனதிற்கு சாந்தமும் அளிக்கிறது. காவிரிக் கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழகமும், கா்நாடகமும் காவிரியால் நன்மையடைந்து வருகிறது. தென்னிந்தியாவில் அதிக திருத்தலங்களை கொண்டது கா்நாடகமும் தமிழகமும்தான்.கோயிலுக்கு வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு இங்கு உள்ள மாவட்ட நிா்வாகம் பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும் என்றாா்.