தோ்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து, குறைதீா் நாள் முகாம், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் உள்ளிட்டவை நடைபெறாது என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது :
பேரவை பொதுத்தோ்தல் அறிவிப்பால் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டம், அதுபோல மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமைதோறும் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்கள், சிறப்பு மனுநீதி நாள் முகாம் உள்ளிட்டவை நடைபெறாது.
இருப்பினும், பொதுமக்கள் அத்தியாவசிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள புகாா் மனு பெட்டியில் போட்டுச் செல்லலாம். அம்மனுக்கள் பிரிக்கப்பட்டு தொடா்புடைத் துறை அலுவலா்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.