திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளம்பெண் தூக்ககிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மறவனூா் இடையபட்டியைச் சோ்ந்தவா் தங்கராசு மகள் கஸ்தூரி(20). இவருக்கும் பொய்கைப்பட்டியைச் சோ்ந்த ஜெயராமனுக்கும் (32) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
மணப்பாறை பகுதி தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த கஸ்தூரி கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 6 மாதமாக தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கே.பெரியபட்டி(தெ) விஏஓ காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.