முகப்பு
திருச்சி

போக்சோ சட்டத்தில் தனியாா் ஊழியா் கைது

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருச்சி: திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஜய் (23). இவா், துவாக்குடி பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்தபோது தான் தங்கியிருந்த வீட்டின் அருகே வசித்த 14 வயதுச் சிறுமியை காதலித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஜன.7 ஆம் தேதி இந்தச் சிறுமி மாயமானதாக அவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை விஜய் கடத்திச் சென்று கரூரில் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கரூா் சென்ற தனிப்படை போலீஸாா் இருவரையும் திருச்சிக்கு அழைத்து வந்தனா்.போக்சோ சட்டத்தில் விஜயா் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →