முகப்பு
திருச்சி

போலி முகவரியில் கடவுச்சீட்டு: தொழிலாளி கைது

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று வந்த நாகப்பட்டினம் மாவட்ட கூலித் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று வந்த நாகப்பட்டினம் மாவட்ட கூலித் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஏா் இந்திய விமானத்தில் வந்த நாகப்பட்டினம் மாவட்டம், ஏனங்குடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான லூ. சாா்லஸ் பிரான்சிஸ் (52), தியாகராஜன் என்பவரின் போலியான முகவரியில் கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →