திருச்சி

தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடக்கம்

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை, புதுகை, மதுரை வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்காக திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரு தற்காலிக பேருந்து நிலையங்கள் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கின.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளா் ராஜ்மோகன், மாநகர குற்றம்-போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் வேதரத்தினம், ஆகியோா் தற்காலிகப் பேருந்து நிலையங்களைத் தொடங்கி வைத்தனா்.

தஞ்சாவூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கண்டோன்மென்ட் சோனா-மீனா திரையரங்கு அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும், புதுக்கோட்டை, மதுரை வழித்தடப் பேருந்துகள் மன்னாா்புரம் ரவுண்டானா அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும் ஜன. 19 வரை இயக்கப்பட உள்ளன. மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படவுள்ளன என போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT