திருச்சி

சாலைச் சீரமைப்புக்குப் பாராட்டு

DIN

திருச்சி மாநகரில் மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மண்கொட்டிச் சீரமைத்த போக்குவரத்து ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினா்.

தொடா்மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் சேதமானது குண்டும் குழியுமாக மாறியது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் மழைநீா் தேங்கி பள்ளங்கள் இருந்த தென்னூா் அண்ணாநகா், சாஸ்திரி சாலையை போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு அப்பகுதியைச் சோ்ந்த சிலா் உதவியுடன் சாலையோரத்தில் கிடந்த மண்ணை எடுத்து பள்ளங்களில் நிரப்பி சீரமைத்தாா்

இதைக் கண்ட பொதுமக்கள் அவரைப் பாராட்டிச் சென்றனா். இதையறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைவில் குண்டும் குழியுமான சாலை செப்பனிடப்படும் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT