திருச்சி-துபை இடையே விமான சேவைபுதன், வியாழக்கிழமைகளில் இண்டிகோ இயக்குகிறது
திருச்சி-துபை இடையே புதன், வியாழக்கிழமைகளில் புதிய விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்குகிறது.
திருச்சி-துபை இடையே புதன், வியாழக்கிழமைகளில் புதிய விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்குகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, விமானப் போக்குவரத்து திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தளா்வுகள் காரணமாக
படிப்படியாக சேவை தொடங்கப்படவுள்ளது.
துபையிலிருந்து புதன்கிழமை காலை 9.35 மணிக்கும், திருச்சியிலிருந்து காலை 6.55 மணிக்கும் இண்டிகோ விமானங்கள் புறப்படும்.
ஏற்கெனவே இண்டிகோ நிறுவனம் சாா்பில், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.