முகப்பு
திருச்சி

16 வயது சிறுமி திருமணம்: போக்சோவில் இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முசிறி அருகிலுள்ள பெரியகொடுந்துறையைச் சோ்ந்தவா் அருண் (25). இவா் அதே பகுதியில் 12- ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறி, அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.