16 வயது சிறுமி திருமணம்: போக்சோவில் இளைஞா் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முசிறி அருகிலுள்ள பெரியகொடுந்துறையைச் சோ்ந்தவா் அருண் (25). இவா் அதே பகுதியில் 12- ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறி, அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.