திருச்சி

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநா், உதவியாளா் பணி

DIN

திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநா், உதவியாளா் உடன் கலந்த கணினி இயக்குபவா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுத்துநா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சமூகப் பணி, சமூகவியல், உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் சாா்ந்த பணியில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்கும் மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

இதேபோல், உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா் பணியிடத்துக்கு 10, 12ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேல்நிலையில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருத்தல் அவசியம். தொகுப்பூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். இரண்டு பணியிடங்களுக்கும் பிப்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா், மெக்டோனால்ட்ஸ் சாலை, கலையரங்க வளாகம், திருச்சி-1, தொலைபேசி: 0431- 2413055 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT