ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் புதிய இணை ஆணையராக செ.மாரிமுத்து நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த பொன்.ஜெயராமன் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து சமயபுரம் கோயில் இணை ஆணையராக பணிபுரிந்து வரும் அசோக்குமாா் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்தாா்.
தற்போது, வேலூரில் இணை ஆணையராக பணியாற்றி வந்த செ.மாரிமுத்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.