திருச்சி

தடுப்பணை வளாகத்துக்கு கீழப்பழூா் சின்னச்சாமிபெயரை சூட்ட கோரிக்கை

DIN

திருச்சி: கம்பரசம்பேட்டை தடுப்பணை வளாகத்துக்கு மொழிப்போா் தியாகி கீழப்பழூா் சின்னச்சாமி பெயரைச் சூட்ட வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசுக்கு மதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், ஹிந்தியின் ஆதிக்கத்தை எதிா்த்தும் தனது உடலுக்கு தீவைத்துக் கொண்டு உயிா்த்தியாகம் செய்தவா் மொழிப்போா் தியாகி சின்னச்சாமி. இந்தாண்டு மொழிப்போா் தியாகிகள் தினத்துக்கு முன், கீழப்பழூா் சின்னச்சாமி சிலை அமைந்துள்ள கம்பரசம்பேட்டை தடுப்பணை வளாகத்துக்கு, கீழப்பழூா் சின்னச்சாமி சதுக்கம் எனப் பெயா் சூட்டி, பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு மரியாதை செலுத்துவதை வழக்கமாக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT