திருச்சி

குடியரசு தினவிழா: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

DIN

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஐன.26) நடைபெறும் குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

விழாவையொட்டி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் மொய்தீன் உத்தரவின்பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சுசித்குமாா் தலைமையில், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், மோப்ப நாய் ஜடோ உள்ளிட்ட குழுவினா் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனா். அதோடு, ரயில் நிலைய வளாகம், பாா்சல் அலுவலகம், நுழைவு வாயில் உள்ளிட்டஇடங்களிலும் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், பாதுகாப்பு குறைபாடுள்ள இடங்கள், காவிரி, கொள்ளிடம், எடமலைப்பட்டிபுதூா் உள்ளிட்ட பாலப்பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT