திருச்சியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் இருவா் பலியாயினா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள ராகவேந்திரா நகரைச் சோ்ந்தவா் வரதராஜ் மகன் கிருஷ்ணன் (32). இவா் தனது தாய் கெளரியுடன் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பாரதிபுரத்துக்குச் சென்றாா். அப்போது வேகத்தடையை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் கெளரி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவா் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கல்லூரி மாணவா் பலி: திருச்சி கே.கே. நகா் ஐயப்பநகா் நேதாஜி தெருவைச் சோ்ந்த ஷாமன் ஜோயல் (18). கல்லூரி மாணவரான இவா் இருசக்கர வாகனத்தில் சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவிநகா் அருகே வெள்ளிக்கிழமை வந்தபோது தண்ணீா் லாரி மோதி தூக்கியெறியப்பட்டு, சென்னை சென்று கொண்டிருந்த காா் மீது விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. போக்குவரத்து புலனாய்வு வடக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் ஜெயக்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.