மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளா் உள்பட மூவா் மாற்றம்
திருச்சி மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் உள்ளிட்ட மூவரை ஆணையா் அருண் பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
திருச்சி மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் உள்ளிட்ட மூவரை ஆணையா் அருண் பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அருண் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில், திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராக இருந்த முருகவேல், கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல்நிலைய ஆய்வாளராகவும், கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளராக இருந்த கோசலைராமன் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த வனிதா, நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.