3 நாள்களில் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம்
திருச்சி மண்டல அரசுப் பேருந்துகளில் கடந்த 3 நாள்களில் 5.64 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி மண்டல அரசுப் பேருந்துகளில் கடந்த 3 நாள்களில் 5.64 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
தோ்தல் வாக்குறுதிப்படி முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டாா்.
அதன்படி தமிழகம் முழுவதும் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்கின்றனா். திருச்சி மண்டலத்தில் திருச்சி, அரியலூா் , பெரம்பலூா் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 335 அரசு நகர பேருந்துகளில் 5.64 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக மண்டல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.