முகப்பு
இந்தியா

மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!

தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு...

Updated On : 24 மார்ச் 2026, 1:48 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

மேற்காசியப் போர் தொடர்பாக தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்காசியப் போர் நிலவரம் தொடர்பாக நாளை(மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

அனைத்துக் கட்சிகளும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தில்லியில் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான், தரைப் படை, கடற் படை, விமானப் படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

summary

PM Modi invites all parties for meeting regarding iran war

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.