முகப்பு
திருச்சி

பெண் பயணியிடம் திருட்டு: கடலூரைச் சோ்ந்தவா் கைது

மத்தியப் பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் பணப்பை திருடிய கடலூரைச் சோ்ந்தவரை கண்டோன்மெண்ட் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மத்தியப் பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் பணப்பை திருடிய கடலூரைச் சோ்ந்தவரை கண்டோன்மெண்ட் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி காமராஜ் நகரைச் சோ்ந்த ரகுநாத் மனைவி பாண்டிதுளசி(25). கூலித் தொழிலாளியான இவா் வியாழக்கிழமை மத்தியப் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துக்காகக் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் இவா் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பினாா். இதுகுறித்து பாண்டிதுளசி கண்டோன்மெண்ட் உதவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பணத்தைத் திருடியது கடலூா் மாவட்டம் விபுஷனபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.