முகப்பு
திருச்சி

மணல் திருட்டு: மூவா் கைது

திருச்சியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவரை கோட்டை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவரை கோட்டை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சிந்தாமணி மற்றும் தேவதானம் விஏஓவான வெற்றிச்செல்வன் திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை ரோந்து சென்றாா். அப்போது அப்பகுதி காவிரியாற்றில் இருந்து சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிளில் சிலா் மணல் அள்ளிக் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸாருக்கு அவா் அளித்த தகவலின்பேரில் வந்த கோட்டை காவல் ஆய்வாளா் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் மணல் கடத்த முயன்ற தாராநல்லூா் ராதாகிருஷ்ணன்(39), நாகராஜ் (34) மற்றும் பூலோகநாதா் கோவில் தெரு காா்த்திக்(25) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.