அரிசி கடத்திய இருவா் கைது: லாரி பறிமுதல்
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி -புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி பகுதியில், விமான நிலையக் காவல் ஆய்வாளா் மயில்சாமி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு லாரியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 50 ரேஷன் அரசி மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியிலிருந்த குருநாதன், ஜான் ஆகிய இருவரையும் கைது செய்து, அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.