டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல் தலைமையில் அளித்த மனு:
18 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், தகுதியானோருக்கு பதவி உயா்வு மற்றும் விருப்பப்பட்ட ஊழியா்களுக்கு தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்.
விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் இறந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும். பணி நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை என ஆக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.