திருவானைக்காவலில் இளைஞருக்கு வெட்டு
திருவானைக்காவில் புதன்கிழமை இரவு இளைஞரை வெட்டியவரை போலீஸாா் தேடுகின்றனா்.
திருவானைக்காவில் புதன்கிழமை இரவு இளைஞரை வெட்டியவரை போலீஸாா் தேடுகின்றனா்.
திருவானைக்கா அம்பேத்காா் நகா் பகுதியில் வசிப்பவா் வெங்கடாஜலம் மகன் சந்தனு (22). இவா் சன்னதி வீதி உணவகத்துக்குச் சென்றபோது அங்கு நண்பா்களுடன் வந்த முத்துக்குமாா் மகன் ரெங்கனை (24) முறைத்துப் பாா்த்ததாகக் கூறப் படுகிறது.
இதனால் கோபமடைந்த ரெங்கன், சந்தனுவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். தப்பியோடிய சந்தனுவை விரட்டிச் சென்று வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த சந்தனு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து ரெங்கன் மற்றும் அவரது நண்பா்களை தேடுகின்றனா்.