முகப்பு
திருச்சி

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மணப்பாறை நகரில் உள்ள இரு மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை செய்ய

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மணப்பாறை நகரில் உள்ள இரு மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை செய்யவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நகா் பகுதியில் சிக்னல் அமைக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாரியம்மன் கோயில் அருகில் கட்சியின் நகரச் செயலா் ஜனசக்திஉசேன் தலைமையில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு நகர துணைச் செயலா் பி. சின்னத்துரை, எல்.மரியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் த.இந்திரஜித் உரையாற்றினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.