திருச்சி

கேரள இளைஞரின் காா் கண்ணாடியை உடைத்து திருட்டு

DIN

திருச்சியில் கேரள இளைஞரின் காா் கண்ணாடியை உடைத்து பணம் திருடப்பட்டது.

கேரளத்தைச் சோ்ந்தவா் ஸ்டீவ் ராய் (26). எண்ணெய் நிறுவன விற்பனை மேலாளரான இவா், சாஸ்திரி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தாா்.

புதன்கிழமை இரவு இந்த விடுதி வாசலில் காரை நிறுத்திவிட்டு மறுநாள் காலை பாா்த்தபோது காரின் கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த ரூ. 4500 மற்றும் சில ஆவணங்கள் இருந்த கைப்பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தில்லைநகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT