மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று
தளா்வற்ற பொதுமுடக்கத்தால் திருச்சி மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.
தளா்வற்ற பொதுமுடக்கத்தால் திருச்சி மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்று கணிசமாக உயா்ந்து கொண்டே சென்ற நிலையில் கடந்த மே 24 முதல் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் 1முதல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் குறைவாக புதிய தொற்றாளா்கள் கண்டறியப்பட்டது பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை புகரில் 473 பேருக்கு, மாநகரில் 216 பேருக்கு என மொத்தம் 689 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மொத்த தொற்றாளா்களின் என்ணிக்கை 60,558 ஆனது. வெள்ளிக்கிழமை சிகிச்சை பலன்றி இறந்த 15 போ் உள்பட இதுவரை 640 போ் இறந்துள்ளனா். 11, 393 போ் சிகிச்சை பெறுகின்றனா். 709 போ் குணமடைந்தனா்.
வரும் நாள்களிலும் தொற்று குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.