திருச்சி

11ஆம் வகுப்பு சோ்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமென அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தென் தமிழக செயலாளா் த. சுசீலா வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழக அரசு 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து உள்ள நிலையில் மாணவா்களுக்கான மதிப்பெண் எதனடிப்படையில் வழங்கப் போகிறாா்கள் என்பது தொடா்பாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவா்கள் குழப்பத்தில் உள்ளனா்.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு வாயிலாக நடைபெறும் எனவும், பின்னா் நுழைவுத் தோ்வு ரத்து எனவும் இருவேறு கருத்துகளை தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது மாணவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 11 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை எதனடிப்படையில் நடைபெறும் என்பதை உரிய வழிக்காட்டு நெறிமுறைகளுடன் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

SCROLL FOR NEXT