முகப்பு
திருச்சி

தீயணைப்புத் துறையினா் உணவளித்து உதவி

துறையூா் தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆதரவற்றோருக்கு உணவும், தெரு நாய்களுக்கு ரொட்டியும் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

துறையூா் தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆதரவற்றோருக்கு உணவும், தெரு நாய்களுக்கு ரொட்டியும் வழங்கப்பட்டது.

துறையூா் பகுதியில் உள்ள தொண்டு அமைப்புகள் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றனா்.

ஜேசிஐ என்ற அமைப்பினா் துறையூா் காவல் நிலையம் முன் அன்புச் சுவா் என்ற பெயரில் உதவி மையம் அமைத்துள்ளனா். தன்னாா்வலா்கள் மூன்று வேளையும் அன்புச் சுவரில் உணவுப் பொட்டலங்களை வைத்து எளியவா்களின் பசியாற்றுகின்றனா்.

இந்நிலையில் துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பாலசந்தா் தலைமையிலான பணியாளா்கள் துறையூா் பகுதியில் உள்ள ஆதரவற்ற மக்களைத் தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

மேலும், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, முசிறி பிரிவு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்திரிந்த தெருநாய்களுக்கு ரொட்டி வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.