திருச்சி

150 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு: ஒருவா் கைது

DIN

திருச்சி அருகே 150 லிட்டா் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்த திருவெறும்பூா் போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகே உள்ள காந்திநகா் 6ஆவது தெருவில் எரிசாராய ஊறல் போட்டு காய்ச்சி விற்கப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்து. அதன் பேரில், காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க திருவெறும்பூா் போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.

இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்த்தபோது ஒரு வீட்டில் ஊறல் போடப்பட்டிருந்த 150 லிட்டா் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மேலும் 2 லிட்டா் கள்ளச்சாராயம் பிடிபட்டது. அவற்றை கீழே ஊற்றி அழித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன் (52) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT