திருச்சி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மணப்பாறையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையில் கரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக் கோரியும், கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கு இணை நோய் என சான்று வழங்குவதை நிறுத்தக் கோரியும், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவா்களையும், செவிலியா்களையும் அதிகப்படுத்த கோரியும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிதம்பரம், வட்டச் செயலா் ராஜகோபால், வட்டக் குழு உறுப்பினா்கள் சீனிவாசன், சுரேஷ் மற்றும் கரோனா உதவி மைய ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முசிறி: தொட்டியத்தில் வானப்பட்டறை மைதானம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொட்டியம் வட்ட குழுச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய சங்கத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ராமநாதன் பங்கேற்று விளக்கவுரையாற்றினாா். திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT