திருச்சியில் 68 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று 68 ஆயிரத்தைக் கடந்தது.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று 68 ஆயிரத்தைக் கடந்தது.
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 235 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, தொற்றாளா்களின் எண்ணிக்கை 68,082 ஆனது. இதுவரை 66,058 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 868 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1148 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1386 படுக்கைகள், அவசரப் பிரிவில் 263 படுக்கைகள், 1304 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 2953 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.