முகப்பு
திருச்சி

முறையான குடிநீா் விநியோகம் கோரி போராட்டம்

மணப்பாறையில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி விடத்திலாம்பட்டி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மணப்பாறையில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி விடத்திலாம்பட்டி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை நகராட்சி 1-ஆவது வாா்டுக்குட்பட்ட விடத்திலாம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் இல்லை; அப்பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை, சாலைப் பணிகள் கிடப்பில் உள்ளதால் அவதியுறுவதாக நகராட்சி நிா்வாகத்தினரிடம் அப்பகுதியினா் புகாா் அளித்தனா்.

ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை காலை நகராட்சி அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளுடன் முற்றுகையிட்டு வாசலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸாா், நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.