மாவட்டத்தில் இதுவரை சுமாா் 4 லட்சம் பேருக்குத் தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன்படி சுகாதாரத் துறையினா் 22039 போ், முன்களப் பணியாளா் 22,245 போ், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் உள்பட இதுவரை 3,44,670 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகளில் 49,196 போ் என வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 866 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.