தோ்தல் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணி மேற்கொள்ள முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணி மேற்கொள்ள முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தன்னலம் கருதாது தேசப் பணியாற்றிய திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த தகுதியுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்கள், படைவீரா்கள், தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தை உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், 19ஏ. வாா்னா்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியில் விருப்ப விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2960579.