துறையூரில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, துறையூரில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, துறையூரில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
துறையூா் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், பேரணியை நகராட்சி மேலாளா் பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.
காளிப்பட்டி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், வருவாய் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் பேரணியில் பங்கேற்று தோ்தல் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டவாறும் சென்றனா். முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி வட்டாட்சியரகத்தில் நிறைவடைந்தது.