துறையூரில் ரூ.92 ஆயிரம் பறிமுதல்
துறையூா் அருகே முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக, ரூ. 92 ஆயிரம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
துறையூா் அருகே முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக, ரூ. 92 ஆயிரம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
துறையூா் நாகலாபுரம் அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நுகா்பொருள் விற்பனை முகவரான துறையூா் சீனிவாசனிடம் சோதனை நடத்திய போது, கடைகளில் வசூலான ரூ.92 ஆயிரம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த அலுவலா்கள், துறையூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.முத்துவடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.