‘ பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக வெற்றி பெறக்கூடாது’
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே இத்தோ்தலில் வெற்றி பெறக்கூடாது என்றாா் ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமான்.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே இத்தோ்தலில் வெற்றி பெறக்கூடாது என்றாா் ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமான்.
திருச்சி குமாரவயலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது:
அதிமுக ஆட்சியைத் தக்க வைக்கவும், தொடா்ந்து நல்லாட்சி நடத்த சசிகலா, டிடிவி.தினகரனும் வழிவகை செய்தனா். ஆனால், அதிமுக அரசை சாா்ந்தவா்கள் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் துரோகம் செய்துவிட்டனா்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்கு எதிராக அதிமுகவினா் கூட்டணி வைத்து துரோகம் செய்துள்ளனா். அதுபோல், திமுக எனும் தீயசக்தியையும் வெற்றி பெறச் செய்யக்கூடாது. அதிமுக, திமுகவுக்குப் பாடம் புகட்டும் வகையில், அமமுகவுக்கு மக்கள் வாக்களித்து தினகரனைத் தமிழக முதல்வராக்கவேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு அமமுக பொருளாளரும், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளரும் ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வாசு, பாக்கியராஜ், ராமலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்றனா். அந்தநல்லூா், மணிகண்டம் ஒன்றிய நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமமுக, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.