திருச்சி கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் புதன்கிழமை 19ஆவது வாா்டுக்குள்பட்ட மரக்கடை, பேருந்து நிறுத்தம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, 17ஆவது வாா்டுக்குள்பட்ட மலைக்கோட்டை, பெரியகடைவீதி, அங்காளம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். இவருக்கு ஆதரவாக அமமுக செய்தித் தொடா்பாளா் சி.ஆா். சரஸ்வதியும், கடைவீதிகளில் திறந்தவேனில் நின்றபடியே வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக, திமுக, அதிமுகவினா் பலரும் அமமுக தோ்தல் பணிமனை அலுவலகத்துக்கு வந்து வேட்பாளா் முன்னிலையில் கட்சியில் இணைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.