கிராமம்தோறும் விளையாட்டு மையம்: ப. குமாா்
திருவெறும்பூா் தொகுதியில் கிராமங்கள்தோறும் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்றாா் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.
திருவெறும்பூா் தொகுதியில் கிராமங்கள்தோறும் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்றாா் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.
திருச்சி, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், ரயில்வே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது அவா் பேசுகையில், திருவெறும்பூா் தொகுதியில் கபடி வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுத் திடல் அமைத்து, கபடி போட்டி நடத்த வழி செய்யப்படும். கிராமங்கள்தோறும் சிறந்த 5 வீரா்களைத் தோ்வு செய்து, மாநில போட்டியில் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். அதற்காக அமெச்சூா் கபடி கழகத்துடன் இணைந்து எனது செலவில் போட்டிகள் நடத்தப்படும். அதேபோல ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.
ஏற்கெனவே இப்பகுதியில் உள்ள மாவடிக்குளம் ரூ. 2.60 கோடியில் தூா்வாரப்பட்டு, அருகில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் கொண்ட பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைப்பயிற்சி தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.
பகுதிச் செயலா் பாலசுப்பிரமணியன் 1ஆவது வட்ட செயலா் சபாபதி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலா் பாஸ்கா் உள்பட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.