பொறியாளா் தற்கொலை
திருச்சியில் திருமணமாகாத விரக்தியில் கரூரைச் சோ்ந்த பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சியில் திருமணமாகாத விரக்தியில் கரூரைச் சோ்ந்த பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வடக்கு சவரிமேடு மாடு விழுந்தான் பாறையைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் கேசவன்(24). பொறியியல் பட்டதாரியான இவா், திருச்சி உறையூா் ராமலிங்க நகரில் தங்கி அங்குள்ள ஓட்டுநா் பழகுநா் பள்ளியில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக திருமணமாகாத விரக்தியில் இருந்த இவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த உறையூா் போலீஸாா் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.