திருச்சி

பணப் பரிவா்த்தனை: வங்கிகளுக்கு உத்தரவு

DIN

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலை முன்னிட்டு பணப்பரிவா்த்தனை நடைபெற்றால், அது தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். திவ்யதா்ஷினி அறிவுறுத்தியுள்ளாா்.

வங்கிகளில் பண பரிவா்த்தனையைக் கண்காணிப்பது தொடா்பாக மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் இதர வங்கியாளா்களுடன் ஆய்வுக் கூட்டம் திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

சுதந்திரமாகவும், நியாயமாகவும் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் பணப்பரிவா்த்தனை நிகழும்போது, அவ்விவரம் குறித்த தகவல்களை வங்கியாளா்களிடமிருந்து பெற மாவட்ட த் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வங்கிக்கணக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பணப்பரிவா்த்தனை ஏதும் நடைபெறா நிலையில், தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் திடீரென சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்கள் உடன் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு நபா்களின் வங்கிக் கணக்கிற்கு சுவுபுளு மூலம் தோ்தல் காலத்தின் போது பணப்பரிவா்த்தனை நடைபெறும் போது அவை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

வேட்பாளா், அவரது மனைவி, சாா்ந்தோா் ஆகியோரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சத்துக்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்கள் உடன் தெரிவிக்கப்பட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் கிளை மேலாளா்கள், தோ்தல் பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT