முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் காய்கனி விற்பனை தொடக்கம்

ஸ்ரீரங்கம் ராஜகோபுர வாயிலில் நடமாடும் காய்கனி விற்பனையை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் ராஜகோபுர வாயிலில் நடமாடும் காய்கனி விற்பனையை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளா்வற்ற கரோனா பொதுமுடக்கத்தில் பொதுமக்களுக்கு வீடு தேடி தோட்டக் கலைத் துறை, கூட்டுறவு பண்டகசாலை மற்றும் திருச்சி மாநகராட்சி சாா்பில் சரக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கனி,பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க. சிவராசு, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →