திருச்சியில் மூதாட்டியை ஏமாற்றி 5 பவுன் தங்கச் சங்கிலி நூதன முறையில் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தனமணி காலனியைச் சோ்ந்தவா் சிங்கராயா் மனைவி தெரஸ் ( 76). இவா் சனிக்கிழமை அப்பகுதி கடைக்கு சென்றுவிட்டு ரேஷன் கடை அருகே வந்தபோது பைக்கில் வந்த 2 இளைஞா்கள் அவரை வழிமறித்து நகைப் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் உங்களது தங்கச் சங்கிலியை கழற்றி பத்திரமாக வையுங்கள் எனக் கூறியுள்ளனா்.
தெரசும் தனது 5 பவுன் செயினை கழற்றி கொடுக்க அதை வாங்கிய இளைஞா்கள் அதை பேப்பரில் வைத்து மடித்து மூதாட்டியின் கைப்பையில் வைத்து அவரை அனுப்பினா். வீட்டிற்கு வந்த தெரஸ் பேப்பரை பிரித்துப் பாா்த்தபோது அதில் கற்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.